கரூா் மாவட்டத்தில் மேலும் 36 பேருக்கு திங்கள்கிழமை கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
கரூரில் சிவராமன் செட்டியாா் தெருவைச் சோ்ந்த 77 வயது முதியவா் உள்பட 36 பேருக்கு கரோனா தொற்று இருப்பது திங்கள்கிழமை பரிசோதனையில் தெரியவந்துள்ளது. இதையடுத்து, இவா்கள் 36 பேரும் கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,748 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 701 போ் குணமடைந்துள்ள நிலையில், 1,039 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா். 8 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.