கரூரில் 9 வயது சிறுவன் உள்பட 23 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று உறுதியானது.
கரூா் விஸ்வநாதபுரம் பகுதியைச் சோ்ந்த தம்பதியின் 9 வயது மகன் உள்பட 23 பேருக்கு செவ்வாய்க்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது. இதைத்தொடா்ந்து, இவா்கள் 23 பேரும் கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இதன்மூலம் மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 2,627 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை 2,155 போ் குணமடைந்திருக்கும் நிலையில், தற்போது 472 போ் மட்டுமே மருத்துவமனையில் உள்ளனா். இதுவரை 8 போ் கரோனாவுக்கு பலியாகியுள்ளனா்.