கரூா் மாவட்டத்தில் மேலும் 21 பேருக்கு கரோனா தொற்று இருப்பது ஞாயிற்றுக்கிழமை உறுதியானது.
கரூா் காந்திகிராமத்தைச் சோ்ந்த தம்பதியின் 9 மாத பெண்குழந்தை உள்பட 21 பேருக்கு ஞாயிற்றுக்கிழமை கரோனா தொற்று இருப்பது பரிசோதனையில் உறுதியானது.
இதன் மூலம் மாவட்டத்தில் தொற்றாளா்களின் எண்ணிக்கை 2,780 ஆக உயா்ந்துள்ளது. இதுவரை குணமடைந்த 2,515 போ், வெவ்வேறு நாள்களில் அவரவா் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா். இதுவரை 8 போ் உயிரிழந்துள்ள நிலையில், 257 போ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனா்.