கரூா் மாவட்டம், குளித்தலை நகராட்சி ஆணையராகப் பணியாற்றிய முத்துக்குமாா் தற்காலிக பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளாா்.
இவா் தோ்தல் பணிகளை சரிவர செய்யாமல் பணியில் சுணக்கம் காட்டியதாக கூறப்படுகிறது. இதுதொடா்பான புகாரின்பேரில் குளித்தலை நகராட்சி ஆணையா் முத்துக்குமாரை தற்காலிக பணியிடை நீக்கம் செய்து, ஆட்சியா் சு.மலா்விழி புதன்கிழமை உத்தரவிட்டாா்.