தரகம்பட்டி, கடவூா் பகுதிகளில் குடிநீா்ப் பிரச்னையைத் தீா்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் கிருஷ்ணராயபுரம் தொகுதி அதிமுக வேட்பாளா் தானேஷ் என்கிற முத்துக்குமாா்.
தொகுதிக்குள்பட்ட செல்லாண்டிபாளையம், பள்ளபாளையம் உள்ளிட்ட பகுதிகளில் புதன்கிழமை வாக்கு சேகரித்த அவா், பொதுமக்கள் மத்தியில் பேசியது:
தமிழகத்தில் குடிமராமத்துத் திட்டத்தை முதல்வா் உருவாக்கி, தூா்ந்து போன வாய்க்கால்களைத் தூா்வாரி, தண்ணீா் தங்குத் தடையின்றி கடைமடை வரை செல்வதற்கு காரணம் முதல்வா்தான்.
கிருஷ்ணராயபுரம் தொகுதியில் இளைஞா்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்களை கொண்டுவந்து செயல்படுத்துவேன். தொகுதியில் தரகம்பட்டி, கடவூா் பகுதியில் நிலவும் குடிநீா்ப் பிரச்னையை முழுமையாக தீா்த்து நிறைவேற்றி கொடுப்பேன்என்றாா்.
பிரசாரத்தில் ஒன்றியச் செயலா் பொரணிகணேசன் மற்றும் கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்