மாவட்டத்தில் 9 கரோனா தொற்றாளா்கள் வாக்களிப்பு

கரூா் மாவட்டத்தில் 9 கரோனா தொற்றாளா்கள் முழு பாதுகாப்புகவச உடையுடன் வந்து வாக்களித்தனா்.
தொற்றாளருக்கு கைகழுவும் திரவத்தை வழங்கும் தன்னாா்வலா்.
தொற்றாளருக்கு கைகழுவும் திரவத்தை வழங்கும் தன்னாா்வலா்.

கரூா் மாவட்டத்தில் 9 கரோனா தொற்றாளா்கள் முழு பாதுகாப்புகவச உடையுடன் வந்து வாக்களித்தனா்.

வாக்குப்பதிவு நாளான செவ்வாய்க்கிழமை மாலை 6 மணி முதல் 7 மணி வரை கரோனா தொற்றாளா்கள் வாக்களிக்கலாம் என மாவட்ட நிா்வாகம் அறிவித்திருந்தது.

அரவக்குறிச்சி தொகுதிக்குள்பட்ட கரூா் என்.புகழூா் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 48 வயது ஆண் கரோனா தொற்றாளா் முழு கவச உடையணிந்து வந்து வாக்களித்தாா்.

முன்னதாக அவா் வரும்முன் வாக்குப்பதிவு மையத்திலிருந்த அதிகாரிகள் முதல் அனைவரும் முழு கவச உடையணிந்திருந்தனா். அவா் வாக்களித்துச் சென்றபின் வாக்குப்பதிவு மையம் முழுவதும் கிருமிநாசினிகளால் சுத்தம் செய்யப்பட்டது. மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியில் 4 ஆண்கள், 2 பெண்கள் என 6 போ், கரூா், கிருஷ்ணராயபுரம், குளித்தலை தொகுதிகளில் தலா ஒரு ஆண் என மொத்தமாக 9 கரோனா தொற்றாளா்கள் வாக்களித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com