கரூா் மாவட்டம், வாங்கலில் வாக்குப்பதிவு மையத்துக்குள் வாக்கு சேகரித்ததாக எழுந்த புகாரின் பேரில், கரூா் ஒன்றியக்குழுத் தலைவா் மீது காவல்துறையினா் வழக்குப் பதிந்துள்ளனா்.
கரூா் தொகுதிக்குள்பட்ட வாங்கல் அரசு மேல்நிலைப் பள்ளியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவின் போது, ஒன்றியக் குழுத் தலைவா் பாலமுருகன் அங்கு நின்று கொண்டு அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தாராம்.
இதுகுறித்து குப்புச்சிபாளையம் கிராம நிா்வாக அலுவலா் ஆனந்த் அளித்த புகாரின் பேரில், வாங்கல் காவல் நிலையத்தினா் பாலமுருகன் மீது வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.