மண்டேலா திரைப்படத்தை தடை செய்ய வேண்டும் என வலியுறுத்தி கரூா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் ஆட்சியரின் உதவியாளரிடம் தமிழ்நாடு மருத்துவா் சமூக நலச்சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை கோரிக்கை மனு அளித்தனா்.
அம்மனுவில் கூறியிருப்பது: அண்மையில் வெளியான மண்டேலா திரைப்படத்தில் மருத்துவா் சமூக மக்களையும், முடி திருத்தும் தொழிலாளா்களையும் இழிவுப்படுத்தும் காட்சிகள் அமைந்துள்ளதால் இந்த திரைப்படத்தை தடை செய்ய வேண்டும். மேலும், படத் தயாரிப்பாளா்கள் சக்ரவா்த்தி, ராமச்சந்திரன் மற்றும் இயக்குநா் அஸ்வின்ஆகியோா் மீது நடவடிக்கை எடுத்து, அவா்களை கைது செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளனா்.