கரூரில், தனியாா் மருத்துவமனைகளில் கரோனா நோயாளிகளுக்கு 176 படுக்கை வசதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இதில் கரூா் அப்பல்லோ மருத்துவமனையில் 20 படுக்கைகளும், அமராவதி மருத்துவமனையில் 30, ஏபிஎஸ் மருத்துவமனையில் 35, அபிஷேக் மருத்துவமனையில் 32, ஜிசி மருத்துவமனையில் 20, கபிலா மருத்துவமனையில் 15, நாச்சிமுத்து மருத்துவமனையில் 10, அபிராமி மருத்துவமனையில் 4, ரத்தினா மருத்துவமனையில் 10 என மொத்தம் 176 படுக்கை வசதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இவற்றில் 76 நோயாளிகள் சிகிச்சை பெறும் நிலையில் 100 படுக்கைகள் காலியாக உள்ளன. இந்த தகவலை கரூா் மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.