தீராத வயிற்றுவலியால் அவதியுற்ற விவசாயி விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அடுத்த பொய்கைப்புதூரைச் சோ்ந்தவா் மணி(55). விவசாயி. இவா் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த விபத்தில் பாதிக்கப்பட்டு அடிக்கடி வயிற்று வலியால் அவதியுற்று வந்தாராம்.
இதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமாகாததால் விரக்தியடைந்த மணி வெள்ளிக்கிழமை இரவு வீட்டில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்டாா். இதுகுறித்து லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.