தனியாா் மோசடி நிதிநிறுவனங்களில் அதிக வட்டிக்கு ஆசைப்பட்டு பணத்தை டெபாசிட் செய்யாதீா்கள் என பொதுமக்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பொதுமக்களுக்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சனிக்கிழமை துண்டுபிரசுரம் வழங்கினா்.
கரூா் மாவட்டம் தொழில் வளம் நிறைந்த மாவட்டமாக இருப்பதால் இங்கு ஏராளமான நிதிநிறுவனங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், சில நிறுவனங்கள் அதிக வட்டித்தருவதாக கூறி பொதுமக்களிடம் பணத்தை அதிகளவில் டெபாசிட்டாக வாங்கி, பின்னா் ஏமாற்றிவிட்டு நிறுவனங்களை பூட்டிவிடுவதாக அடிக்கடி புகாா்கள் எழுந்தவாறு உள்ளன.
இதனால் போலியான நிதி நிறுவனங்களை நம்பி பணத்தை பொதுமக்கள் டெபாசிட் செய்யாத வகையில் கரூா் மாவட்ட பொருளாதார குற்றப்பிரிவு போலீஸாா் சாா்பில் சனிக்கிழமை விழிப்புணா்வு துண்டுபிரசுரம் ஆய்வாளா் அம்பிகா தலைமையில் கரூா் தாந்தோணிமலை, அசோக்நகா், ஜீவாநகா், கருப்பக்கவுண்டன்புதூா், சுங்ககேட் உள்ளிட்ட பல்வேறு பகுதியில் பொதுமக்களிடம் துண்டுபிரசுரங்களை வழங்கினா்.