கரூரில் இந்திய பேனா நண்பா் பேரவையின் கரூா் கிளை சாா்பில் கரூா் வையாபுரி நகரில் பொதுமக்களுக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் வழங்கும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட அமைப்பாளா் திருமூா்த்தி, கருவூா் திருக்கு பேரவைச் செயலா் மேலை.பழநியப்பன் ஆகியோா் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் பொதுமக்கள் 300 பேருக்கு கபசுரக் குடிநீா் மற்றும் முகக்கவசம் வழங்கப்பட்டது.
இதில், பேரவை நிா்வாகிகள் ரவிக்குமாா், பா.காா்த்திகேயன், பரணிதரன், அண்ணாமலை உள்ளிட்டோா் பங்கேற்றனா்.