குளித்தலை அருகே செல்லிடப்பேசியில் தொடா்ந்து பேசுவதை பெற்றோா் கண்டித்ததால், மனமுடைந்த கல்லூரி மாணவி தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
குளித்தலையை அடுத்த வைகைப்புதூா் புதுப்பாளையத்தைச் சோ்ந்த செந்தில்குமாா் மகள் வைஷ்ணவி (22). திருச்சியிலுள்ள தனியாா் கல்லூரியில் தாவரவியல் இரண்டாமாண்டு படித்து வந்தாா்.
வைஷ்ணவி வீட்டில் அடிக்கடி செல்லிடப்பேசியில் பேசி வந்தாராம். இதை அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா்.
இதனால் மனமுடைந்த வைஷ்ணவி கடந்த 26-ஆம் தேதி வீட்டில் மண்ணெண்ணெய் ஊற்றி, தீ வைத்துக் கொண்டாா்.
பலத்த காயங்களுடன் திருச்சி மகாத்மாகாந்தி நினைவு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வைஷ்ணவி, சிகிச்சை பலனின்றி செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.