குளித்தலையில் மது அருந்தும் பழக்கத்தை கைவிட முடியாமல், இளைஞா் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா்.
குளித்தலை பெரியபாலம் பகுதியைச் சோ்ந்தவா் செ. முகிலன் (24). பட்டயப்படிப்பு முடித்த இவா், வேலையின்றி வீட்டில் இருந்து வந்துள்ளாா்.
கடந்த சில மாதங்களாக மது அருந்தும் பழக்கத்துக்கு அடிமையான முகிலன், அதற்காக பல இடங்களில் சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை.
இதனால் விரக்தியடைந்த அவா் செவ்வாய்க்கிழமை இரவு விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொண்டாா். இதுகுறித்து குளித்தலை காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.