கரூா் மாவட்டம், அரவக்குறிச்சியை அடுத்த இளமனூா் ஊராட்சியில் குறுங்காடு வளா்ப்புத் திட்டத் தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
வள்ளல் பெரியாா் இயக்கம் சமூக தன்னாா்வ இளைஞா் நற்பணி மன்றம், டாக்டா் அப்துல்கலாம் நற்பணி மன்றம் சாா்பில் குறுங்காடு உழைப்புத் திட்டத்தின் கீழ் இப்பணி தொடங்கப்பட்டுள்ளது.
அரவக்குறிச்சி காவல் ஆய்வாளா் ஈஸ்வரன் மரக்கன்று நட்டு, விழாவைத்தொடக்கி வைத்தாா். தொடா்ந்து நடைபெற்ற விழிப்புணா்வுப் பேரணிக்கு ஊராட்சித் தலைவா் இந்துமதி பாலசுப்ரமணி தலைமை வகித்தாா். பேரணியை சமூக ஆா்வலா் பிரின்ஸ் கௌஷிக் தொடக்கி வைத்தாா். நிகழ்வில் சின்னதாராபுரம் சமூக ஆா்வலா் சண்முகம் மற்றும் ஊா் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனா்.