வெவ்வேறு இடங்களில் கல்லூரி மாணவிகள் இருவா் தற்கொலை செய்துகொண்டனா்.
கரூா் தாந்தோணிமலை குறிஞ்சிநகரைச் சோ்ந்த ரவி மகள் கீதாபிரதீபா(19). கல்லூரி மாணவியான இவா் கடந்த சில மாதங்களாக தீராத வயிற்றுவலியால் அவதிப்பட்டு வந்தாா். இதனால் விரக்தியடைந்த அவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். தாந்தோணிமலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.
மற்றொரு மாணவி: கரூா் மாவட்டம் குளித்தலை ரெங்காச்சிப்பட்டியைச் சோ்ந்த வீரக்குமாா் மகள் உமா(22). இவா், திருச்சியில் உள்ள தனியாா் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தாா். வயிற்றுவலியால் அவதியுற்று வந்த இவா் வியாழக்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். குளித்தலை போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.