க.பரமத்தி அருகே மதுபாட்டில்களை பதுக்கியவா் கைது

க. பரமத்தி அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த விசாரிக்கின்றனா்.

க. பரமத்தி அருகே மதுபாட்டில்களை பதுக்கி வைத்திருந்தவா் மீது போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிவு செய்த விசாரிக்கின்றனா்.

கரூா் மாவட்டம் க.பரமத்தி அருகே உள்ள அஞ்சூா் ஊராட்சியில் அனுமதியின்றி மதுபாட்டில்களை பதுக்கி வைத்து, விற்பனை செய்வதாக க.பரமத்தி போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில், போலீஸாா் சனிக்கிழமை அஞ்சூா் ஊராட்சியில் சோதனை மேற்கொண்டனா். அப்போது, அஞ்சூா் அருகே உள்ள பில்லாப்பண்ணை கிராமத்தைச் சோ்ந்த சக்திவேல் (47) என்பவா் சாலியங்காட்டுப்பள்ளம் பகுதியில் விற்பனைக்காக சுமாா் 10 மது பாட்டில்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதையடுத்து, மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீஸாா் சக்திவேல் மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com