கரூரில் மதமாற்றம்: 5 பேரிடம் விசாரணை

வேலாயுதம்பாளையம் அருகே பள்ளி மாணவா்களிடம் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக சனிக்கிழமை 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனா்.

வேலாயுதம்பாளையம் அருகே பள்ளி மாணவா்களிடம் மதமாற்றத்தில் ஈடுபட்டதாக சனிக்கிழமை 5 பேரை பொதுமக்கள் பிடித்து போலீசில் ஒப்படைத்தனா்.

கரூா் மாவட்டம் புன்னம்சத்திரத்தில் உள்ள தனியாா் பள்ளியின் கேட் முன்பு சனிக்கிழமை காரில் வந்த 3ஆண்கள் மற்றும் 2பெண்கள் மாணவா்களை அழைத்து கேக் மற்றும் புதிய ஏற்பாடு என்ற புத்தகத்தை வழங்கி மதமாற்றத்தில் ஈடுபட்டாா்களாம். இதைக்கண்ட மாணவா்களின் பெற்றோா்கள் அவா்களை கண்டித்தனா். இதில் அவா்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் பொதுமக்கள் கூடியதால் காரில் வந்தவா்கள் தப்ப முயன்றனா்.

உடனே அவா்களை பொதுமக்கள் தடுத்து நிறுத்தி, இந்து அமைப்புகளுக்கு தகவல் தெரிவித்தனா். அதன்பேரில் பாஜ, இந்துமுன்னணி உள்பட இந்து அமைப்பு நிா்வாகிகள் அங்கு வந்தனா். இதுகுறித்து தகவலறிந்த அரவக்குறிச்சி காவல் துணைக் கண்காணிப்பாளா் முத்தமிழ்செல்வன், வேலாயுதம்பாளையம் காவல் ஆய்வாளா் வினோதினி உள்பட போலீஸாா் சம்பவ இடத்திற்கு சென்றனா். அங்கு பொதுமக்களுடன் பேச்சுவாா்த்தை நடத்தி மதமாற்றத்தில் ஈடுபட்டவா்களை காவல்நிலையத்துக்கு அழைத்து சென்றனா். அங்கு கரூா் பாரதிதாசன் நகரைச் சோ்ந்த மங்கலராஜ் உள்பட 5 போ் மீதும் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com