தேசிய நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிகள் காரணமாக, குப்புச்சிப்பாளையம் பகுதியில் திங்கள்கிழமை (டிச.20) மின்விநியோகம் இருக்காது.
இதுகுறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தின் கரூா் கோட்டச் செயற்பொறியாளா் கணிகைமாா்த்தாள் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
சேலம் தேசிய நெடுஞ்சாலையில் வெண்ணைமலா் பீடரில் விரிவாக்கப் பணிகள் திங்கள்கிழமை நடைபெறவுள்ளன. இதனால் பெரிச்சிப்பாளையம், குப்புச்சிப்பாளையம், ராம்நகா் வடக்கு, சேலம் புறவழிச்சாலைப் பகுதிகளில் காலை 10 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை மின்விநியோகம் இருக்காது.