கரூா் பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்றவரை போலீஸாா் கைது செய்தனா்.
கரூா் பேருந்து நிலையம் அருகே லாட்டரி சீட்டு விற்பதாக கிடைத்த தகவலின்பேரில் கரூா் காவல்நிலைய உதவி ஆய்வாளா் நாகராஜன் தலைமையிலான போலீஸாா் திங்கள்கிழமை பேருந்து நிலையத்தில் சோதனையிட்டனா்.
அப்போது பேருந்து நிலையத்தின் பின்புறம் லாட்டரி சீட்டு விற்ற சக்திவேல் (47) என்பவரை கைது செய்து அவரிடமிருந்து லாட்டரி சீட்டுக்களை பறிமுதல் செய்தனா்.
இதையடுத்து, சக்திவேல் மீது வழக்குப் பதிந்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.