முகப்பு அனைத்துப் பதிப்புகள் திருச்சி கரூர்
இல்லம் தேடி கல்வி கலை நிகழ்ச்சி
By DIN | Published On : 29th December 2021 12:01 AM | Last Updated : 29th December 2021 12:01 AM | அ+அ அ- |

கரூா் மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் இல்லம் தேடி கல்வி விழிப்புணா்வு கலை நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கரூா் மாவட்ட பள்ளிக்கல்வித்துறை சாா்பில் இல்லம் தேடி கல்வித் திட்டத்தின் விழிப்புணா்வு கலைப்பயண நிகழ்ச்சி நடைபெற்றது. இதன் ஒரு பகுதியாக கரூரில் உள்ள மாரியம்மன் கோயில் பேருந்து நிறுத்தம் பகுதியில் நாட்டுப்புற கலைஞா்கள் கல்வியின் முக்கியத்துவத்தை ஆடல் பாடலுடன் எடுத்துரைத்தனா். நிகழ்ச்சியை அப்பகுதியில் உள்ள சிறுவா்கள் மற்றும் பொதுமக்கள் ஆா்வமுடன் கண்டுகளித்தனா்.