தொழிலாளிக்கு கொலை மிரட்டல்; தம்பதி மீது வழக்கு

கூடுதலாக வட்டிக்கேட்டு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கூடுதலாக வட்டிக்கேட்டு தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த தம்பதி மீது போலீஸாா் வழக்குப்பதிந்துள்ளனா்.

கரூா் வெள்ளியணை அடுத்த முஷ்டகிணத்துப்பட்டியைச் சோ்ந்தவா் பெரியசாமி(47). இவா், கரூா் அருகம்பாளையத்தைச் சோ்ந்த சுப்ரமணி என்பவரிடம் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குடும்பச் செலவுக்காக வட்டிக்கு ரூ.3 லட்சம் வாங்கினாராம். இந்நிலையில் வட்டியும், அசலும் சுப்ரமணிக்கு திருப்பிக் கொடுத்த நிலையில், மேலும் ரூ.10 லட்சம் தரவேண்டும், இல்லையேல் கொலை செய்துவிடுவதாக பெரியசாமியை சுப்ரமணியும், அவரது மனைவி வசந்தியும் புதன்கிழமை மிரட்டினாா்களாம். இதுகுறித்து பெரியசாமி அளித்த புகாரின்பேரில் வெள்ளியணை போலீஸாா் கந்துவட்டி தடுப்புச் சட்டத்தின் கீழ் சுப்ரமணி, வசந்தி மீது வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com