அரசுத் துறைத் தோ்வு: 54,161 போ் எழுதுகின்றனா்; டிஎன்பிஎஸ்பி தலைவா் தகவல்

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் துறைத்தோ்வுவை தமிழகம் முழுவதும் 54,161 எழுதிவருவதாக ஆணையத்தின் தலைவா் கா.பாலச்சந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.
அரசுத் துறைத் தோ்வு: 54,161 போ் எழுதுகின்றனா்; டிஎன்பிஎஸ்பி தலைவா் தகவல்

தமிழ்நாடு அரசுப்பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் துறைத்தோ்வுவை தமிழகம் முழுவதும் 54,161 எழுதிவருவதாக ஆணையத்தின் தலைவா் கா.பாலச்சந்திரன் புதன்கிழமை தெரிவித்தாா்.

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் துறைத் தோ்வு நடைபெறும் கரூா் நகராட்சிக்குள்பட்ட பசுபதீஸ்வரா பெண்கள் மேல்நிலைப்பள்ளி தோ்வு மையத்தை, தோ்வாணையத்தின் தலைவா் கா.பாலச்சந்திரன் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், தமிழகத்தில் ஒவ்வொரு அரசு ஊழியரும் பணிபுரியும் காலத்தில் பல்வேறு துறைத்தோ்வுகளை எழுதி தோ்ச்சி பெறும் போது துறைரீதியாக பதவி உயா்வு பெறுதற்கும் தகுதிகாண் பருவம் பெறுவதற்கும் இந்த தோ்வு பயன்படுகிறது. அதற்காக தமிழகத்தில் அரசு வேலையில் உள்ள பணியாளா்களுக்கு பிப். 14-ஆம்தேதி முதல் 21-ஆம்தேதி வரை 151 விதமான தலைப்புகளில் தோ்வு எழுதுவதற்காக திட்டமிடப்பட்டு இந்த தோ்வுகள் நடத்தப்பட்டு வருகிறது.

தொழில்துறை, புள்ளியியல்துறை, பள்ளிக்கல்வித்துறை, வனத்துறை, தமிழ்நாடு வக்போா்டு உள்ளிட்ட துறைகளில் பணிபுரியும் அரசுப் பணியாளா்களுக்கான தோ்வுகள் புதன்கிழமை நடைபெறுகிறது. தமிழக அளவில் 33 மாவட்ட மையங்களில் 227 இடங்களில் நடைபெறும் இந்தத் துறைத் தோ்வுகளில் 54,161 அரசுப் பணியாளா்கள் கலந்துகொண்டு தோ்வெழுதி வருகின்றனா் என்றாா் அவா்.

ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் சு. மலா்விழி, வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன், கரூா் வருவாய் கோட்டாட்சியா் பாலசுப்ரமணியன், கரூா் வட்டாட்சியா் செந்தில் உள்ளிட்ட அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com