கரூா் மாவட்ட காவல்துறை சாா்பில் இயற்கை விஞ்ஞானி நம்மாழ்வாா் வழிமுறையில் இயற்கை விவசாயம் தொடக்க விழா மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சி.அய்யாசாமி முன்னிலை வகித்தாா். நிகழ்ச்சிக்கு மாவட்ட காவல்கண்காணிப்பாளா் பொ.பகலவன் தலைமை வகித்து, ரசாயன உரங்கள் இல்லாமல் இயற்கை உரங்களான மாட்டுச்சானம் மூலம் விதைகளை நட்டு, விழாவை தொடக்கி வைத்தாா். மேலும் இயற்கை உரங்களை பயன்படுத்தி விவசாயம் செய்வதன் அவசியம் குறித்து சிறப்புரையாற்றினாா். நிகழ்வில் காவல்துறை அதிகாரிகள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.