கரூரில் அம்மா சாலை,நடைமேடை பூங்கா திறப்பு
By DIN | Published On : 27th February 2021 06:25 AM | Last Updated : 27th February 2021 06:25 AM | அ+அ அ- |

கரூரில், அம்மா சாலை, நடைமேடை பூங்கா ஆகியன வெள்ளிக்கிழமை திறக்கப்பட்டது.
கரூா் ரயில்நிலையத்தில் இருந்து சேலம் பைபாஸ் சாலை வரை ரூ.180 கோடியில் அமைக்கப்பட்ட அம்மா சாலையை மாவட்ட ஆட்சியா் சு.மலா்விழி மக்கள் பயன்பாட்டுக்கு வெள்ளிக்கிழமை திறந்துவைத்தாா். மேலும் கரூா் தெற்கு நகரம் பகுதியில் நடைமேடையுடன் கூடிய பூங்காவையும் ஆட்சியா் திறந்துவைத்தாா்.
இந்நிகழ்ச்சியில், திருச்சி மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் ஏ.ஆா்.காளியப்பன், கரூா் நகராட்சி ஆணையா் சுதா மற்றும் வடக்கு நகர அதிமுக செயலா் எம்.பாண்டியன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.