கரூரில், தமிழ்நாடு மருத்துவா் நல சங்கம் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளா் நலச்சங்கத்தினா் வெள்ளிக்கிழமை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரூா் வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற போராட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா். நகரத் தலைவா் சீனிவாசன் முன்னிலை வகித்தாா். மாவட்ட அமைப்பாளா் முத்து உண்ணாவிரதத்தை தொடக்கி வைத்து பேசினாா். இதில் முடிதிருத்தும் தொழிலாளா்கள் திரளாக பங்கேற்றனா்.