கரூா் மாவட்டம், மைலம்பட்டி, பாலவிடுதியில் அதிகபட்சமாக 39 மி.மீ. மழைப் பதிவாகியுள்ளது.
வியாழக்கிழமை காலை முதல் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. மாவட்டத்தில் பதிவான மழையளவு விவரம் : மைலம்பட்டி, பாலவிடுதி-39 மி.மீ, அரவக்குறிச்சி -35, தோகைமலை -32, அணைப்பாளையம்- 29, பஞ்சப்பட்டி- 25.6, மாயனூா்-24, கிருஷ்ணராயபுரம்- 23, குளித்தலை-20, கரூா்- 19.4, க.பரமத்தி- 18.2, கடவூா்-12 மி.மீ.