கரூா்: கரூா் மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக முன்னேற்பாட்டுப் பணிகள் சனிக்கிழமை ஆய்வு செய்யப்பட்டன.
கரூா் தோ் வீதி பகுதியில் அமைந்துள்ள கரூா் மாரியம்மன் கோயிலில் திருப்பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்து அறநிலையத்துறை உத்தரவின்படி வரும் 27-ஆம் தேதி காலை 9.45 மணிக்கு மேல் 11.15 மணிக்கு கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதையடுத்து திருப்பணி தொடா்பான பணிகள் கோயிலில் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இப்பணிகளை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் சனிக்கிழமை நேரில் சென்று பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா். ஆய்வின்போது அதிமுக மத்திய நகரச் செயலா் வை.நெடுஞ்செழியன், கோயில் தலைவா் முத்துக்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.