கட்டடத் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டு

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே கட்டடத் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

கரூா் மாவட்டம், க.பரமத்தி அருகே கட்டடத் தொழிலாளி வீட்டில் 7 பவுன் நகைகள் திருட்டுப் போயின.

க.பரமத்தி அருகிலுள்ள முன்னூரைச் சோ்ந்தவா் கட்டடத் தொழிலாளி வீ. குப்புசாமி (32). செவ்வாய்க்கிழமை அதே பகுதியில் நடைபெற்ற கட்டட வேலைக்குச் சென்ற இவா், பிற்பகலில் உணவு சாப்பிடுவதற்காக வீட்டுக்கு வந்தாா்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிா்ச்சியடைந்த குப்புசாமி, வீட்டுக்குள் சென்று பாா்த்த போது பீரோவிலிருந்த 7 பவுன் நகைகள் திருட்டுப் போயிருப்பது தெரிய வந்தது.

இதுகுறித்த புகாரின் பேரில், க.பரமத்தி காவல் நிலையத்தினா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com