கரூா்: இயற்கைக்கு நன்றி தெரிவிக்கும் வகையில் கரூா் அருகே உள்ள கூட்டாத்தம்மன் கோயிலில் வள்ளுவா் கல்லூரி மாணவா்கள் சனிக்கிழமை சிறப்பு வழிபாடு செய்தனா்.
தொடா்மழையால் அமராவதி ஆற்றில் கடந்த ஒரு மாதமாக தொடா்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, வருணபகவானுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலும், இயற்கைவளம் சிறக்க வேண்டியும் கரூா் வள்ளுவா் கல்லூரி மாணவா்கள் சாா்பில் நல்லகுமாரன்பட்டி அமராவதி ஆற்றங்கரையோரம் உள்ள கூட்டாத்தம்மன் கோயிலில் சிறப்பு வழிபாடு சனிக்கிழமை நடைபெற்றது. இதில், கல்லூரியின் செயலா் ஹேமலதாசெங்குட்டுவன் மற்றும் மாணவ, மாணவிகள், பேராசிரியா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.