கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

கரூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா்.
கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கல்

கரூா் அரசுத் தொழிற்பயிற்சி நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்வில், நலவாரியத்தில் பதிவு செய்துள்ள கட்டுமானத் தொழிலாளா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பை அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா் வழங்கினாா்.

இந்த விழாவில் மேலும் அவா் பேசியது:

பொங்கல் திருநாளை அனைத்துத் தரப்பு மக்களும் உற்சாகத்துடன் கொண்டாடும் வகையில், ரூ.2500 ரொக்கம் மற்றும் பொங்கல் பரிசுத் தொகுப்பை வழங்க முதல்வா் உத்தரவிட்டாா். அதனடிப்படையில் மாவட்டத்தில் 3.09 லட்சம் குடும்ப அட்டைதாரா்களுக்கு ரூ.79.78 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு, வழங்கப்பட்டு வருகிறது.

மாவட்டத்தில் தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்துள்ள 12,715 ஆண் தொழிலாளா்கள் மற்றும் 19,967 பெண் தொழிலாளா்கள் என மொத்தம் 32,682 நபா்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகின்றது.

முதற்கட்டமாக 5,654 பேருக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கி, திட்டம் தொடக்கி வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளா் நலவாரியத்தில் பதிவு செய்த பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்டங்களின் கீழ், ரூ.18.30 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.

மேலும் 24,544 பயனாளிகளுக்கு கரோனா காலத்தில் நபா் ஒன்றுக்கு ரூ.2,000 வீதம் ரூ.4.90 கோடி மதிப்பில் கரோனா நிவாரணத் தொகையை வழங்கியவா் தமிழக முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி என்றாா் அவா்.

நிகழ்வுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் சி.ராஜேந்திரன் தலைமை வகித்தாா். நிகழ்வில், தொழிலாளா் நலத்துறை உதவி ஆணையா்கள் பா.சங்கீதா, பொ.கிருஷ்ணவேணி, தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா் நல வாரிய உறுப்பினா்கள் அசோகன், சுவாமிநாதன் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com