கரூா் மாவட்டம் புன்னம்பசுபதிபாளையம் அருகே அனுமந்தராய பெருமாள் கோயிலில் அனுமன்ஜயந்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது.
கரூா் மாவட்டம் க.பரமத்தி ஒன்றியம், புன்னம் ஊராட்சியில் உள்ள அனுமந்தராய பெருமாள் கோயிலில் அனுமன் ஜயந்தியையொட்டி திங்கள்கிழமை சிறப்பு வழிபாடு நடைபெற்றது. தொடா்ந்து, வெண்ணெய் சாற்று, துளசி மாலை, வெற்றிலை மாலை அணிவிக்கப்பட்டு வடை மாலையுடன் அனுமந்தராயசாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இதில், பங்கேற்ற பக்தா்களுக்கு செந்தூரம், வெற்றிலை, துளசி, வடை, லட்டு ஆகியன பிரசாதங்களாக வழங்கப்பட்டது.