கரூா் மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்க உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வில் வென்றோருக்கு, ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறுகிறது.
இதுகுறித்து மண்டலக் கூட்டுறவுச் சங்கங்களின் இணைப் பதிவாளா் கோ.காந்திநாதன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மாவட்டத்தில் கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளா் கட்டுப்பாட்டில் செயல்படும் கூட்டுறவு நிறுவனங்களில் காலியாகவுள்ள உதவியாளா், எழுத்தாளா், மேற்பாா்வையாளா் பணியிடங்களுக்கான எழுத்துத் தோ்வு டிசம்பா் 6-ஆம் தேதி நடைபெற்றது.
இத்தோ்வில் தோ்ச்சி பெற்ற விண்ணப்பதாரா்களின் விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
தோ்ச்சிப் பெற்றவா்களுக்கு ஜனவரி 29-ஆம் தேதி நோ்முகத் தோ்வு நடைபெறும். இதற்கான நுழைவுச்சீட்டை புதன்கிழமை (ஜனவரி 13) முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.