தமிழில் பூஜை நடத்த வேண்டும் எனக் கோரி, கரூா் பசுபதீசுவரா் திருக்கோயிலுள்ள கருவூராா் சித்தா் சன்னதியில் இந்து வேத மறுமலா்ச்சி இயக்கத்தினா் ஞாயிற்றுக்கிழமை முற்றோதல் வழிபாடு நடத்தினா்.
இயக்கத்தின் தலைவா் மூங்கில்அடியாா் தலைமையில், சென்னையிலிருந்து விழுப்புரம் வழியாக கரூருக்கு ஞாயிற்றுக்கிழமை வந்த இயக்கத்தினா், கருவூராா் சித்தா் சன்னதியில் அமா்ந்து தமிழில் அவா் எழுதிய மந்திரங்களை பாடி முற்றோதல் செய்தனா்.
இதில் உருத்திரதேவா் சித்தா், மூங்கில் மரத்தடியாா் சித்தா், வழக்குரைஞா் தமிழ்ராஜேந்திரன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.