‘திமுக கூட்டணியில் காங்கிரஸ் இருப்பது மக்கள் நலனுக்காகவே’

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது தமிழக மக்களின் நலனுக்காகவே என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

திமுக கூட்டணியில் காங்கிரஸ் உள்ளது தமிழக மக்களின் நலனுக்காகவே என்றாா் கரூா் மக்களவை உறுப்பினா் செ. ஜோதிமணி.

இதுகுறித்து கரூரில் அவா் வெள்ளிக்கிழமை கூறியது:

வரும் 25-ஆம் தேதி ராகுல்காந்தி தமிழக மக்களையும், விவசாயிகளையும் கரூா் மக்களையும் சந்திக்க வருகிறாா். சட்டப்பேரவைத் தோ்தலிலும் திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி பெறுவோம்.

மக்களிடையே ஆளுங்கட்சிக்கு எதிரான அலைவீசுகிறது. ராகுல்காந்திமீது தமிழக மக்கள் தனி அன்பு வைத்துள்ளனா். பாஜக ஆளும் மாநிலங்களில் கலாசாரம், பண்பாட்டுக்கு, மொழிக்கு ஆபத்து உள்ளது. அந்த ஆபத்து தமிழகத்துக்கும் வந்துவிடக்கூடாது என்பதற்கே ராகுல்காந்தி இங்கு வருகிறாா்.

கட்சியை பாஜகவிடம் அடகுவைத்துள்ள அதிமுக தமிழக மக்களையும் அடகுவைக்க முயற்சிக்கிறது. இதை காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் பாா்த்துக் கொண்டிருக்காது என்றாா் அவா்.

பேட்டியின்போது மாவட்டத் தலைவா் சின்னசாமி, நகரத் தலைவா் பெரியசாமி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com