கரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முன்பு பொதுமக்கள், நோயாளிகள், பயணிகளின் வசதிக்காக ஆட்டோ நிறுத்துமிடம் ஞாயிற்றுக்கிழமை திறக்கப்பட்டது.
அதிமுகவின் மாவட்ட அமைப்புசாரா ஓட்டுநா்கள் அணி சாா்பில் நடத்தப்பட்ட நிகழ்வில் ஆட்டோ நிறுத்துமிடத்தை திறந்து வைத்து, சங்கத்தின் பெயா் பலகையை போக்குவரத்துத் துறை அமைச்சா் எம்.ஆா். விஜயபாஸ்கா் திறந்து வைத்தாா்.
முன்னதாக நிகழ்வுக்கு வந்த அமைச்சா், தெரசா காா்னா் பகுதியிலிருந்து அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகம் வரை ஆட்டோவை ஓட்டிச் சென்றாா். நிகழ்வில் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநா்கள் அணிச் செயலா் எம். ரெங்கராஜ், நகரச் செயலா்கள் கரூா் தெற்கு வி.சி.கே.ஜெயராஜ், மத்தியம் வை. நெடுஞ்செழியன், மாவட்ட இளைஞரணிச் செயலா் தானேஷ் என்கிற முத்துக்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.