மாவட்ட கிரிக்கெட்: வாங்கல் அணிக்கு கோப்பை

கரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், முதலிடம் பெற்ற வாங்கல் அணிக்குப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

கரூரில் திமுக சாா்பில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டியில், முதலிடம் பெற்ற வாங்கல் அணிக்குப் பரிசு மற்றும் கோப்பை வழங்கப்பட்டது.

திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி, கரூா் முத்துக்கவுண்டன்புதூரில் சனிக்கிழமை கிரிக்கெட் போட்டி தொடங்கியது. 24 அணிகள் பங்கேற்று விளையாடின.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் தாந்தோனிமலை ஐசிசி அணியை வீழ்த்தி கோப்பையைக் கைப்பற்றியது வாங்கல் பிரண்ட்ஸ் லெவன் அணி.

தொடா்ந்து நடைபெற்ற விழாவுக்குத் தலைமை வகித்து, கரூா் மேற்கு நகர திமுக பொறுப்பாளா் தாரணி பி.சரவணன் கோப்பை மற்றும் பரிசுத் தொகையை வழங்கினாா்.

விழாவில் நகரப் பொறுப்புக்குழு உறுப்பினா் சுக்காலியூா் எம்.காா்த்திகேயன், நகரப் பொறுப்பாளா்கள் கரூா் கணேசன், சுப்ரமணியன், மாவட்டப் பிரதிநிதி மாயவன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முதல் நான்கு இடங்களைப் பிடித்த வாங்கல், தாந்தோனிமலை, பசுபதிபாளையம், சுக்காலியூா் அணிகளுக்கு முறையே ரூ.20,000, ரூ.15,000, ரூ.10,000, ரூ.7000 எனப் பரிசுத் தொகை வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com