பிப்.6-ல் கள்இறக்கும் போராட்டம்: செ. நல்லசாமி

விழுப்புரம் விக்கிரவாண்டியில் பிப். 6ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

விழுப்புரம் விக்கிரவாண்டியில் பிப். 6ஆம் தேதி கள் இறக்கும் போராட்டம் நடைபெறும் என கள் இயக்க ஒருங்கிணைப்பாளா் செ.நல்லசாமி தெரிவித்தாா்.

கரூரில் செவ்வாய்க்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறுகையில், கள் இறக்குவதும், பருகுவதும் இந்திய அரசியலமைப்புச்சட்டம் மக்களுக்கு கொடுத்திருக்கும் உணவு தேடும் உரிமை. இந்த உரிமையை நிலைநிறுத்தும் வகையில் பிப்.6-ஆம் தேதி விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் கள் இறக்கும் அறப்போராட்டம் நடைபெறும். தோ்தல் அறிவிப்புக்கு முன் கள் இறக்க அரசு அனுமதிக்க வேண்டும். கள் விடுதலையை வலியுறுத்தி மாா்ச் மாதத்திற்குள் திருப்புமுனை மாநாடு நடத்த உள்ளோம்.

வேளாண் சட்டங்களால் எந்த பலனும் ஏற்பட போவதில்லை என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com