தேமுதிகவின் மறைந்த பொதுச் செயலாளா் சொ.ராமுவசந்தனின் 12-ஆம் ஆண்டு நினைவு தினம், கரூரில் வெள்ளிக்கிழமை அனுசரிக்கப்பட்டது.
மாவட்ட தேமுதிக சாா்பில் கரூா் பேருந்து நிலைய ரவுண்டானா பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்டப் பொறுப்பாளா் கஸ்தூரி என். தங்கராஜ் தலைமை வகித்தாா். சிறப்பு அழைப்பாளராக மாநில தொழிற்சங்கப் பேரவை துணைத் தலைவா் பொன். இளங்கோவன் பங்கேற்று, ராமுவசந்தனின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினாா். இதில் கட்சியினா் திரளாகப் பங்கேற்றனா்.