தாயின் கழுத்தை அறுத்து கொலை செய்தபள்ளி ஆசிரியா் கைது

குளித்தலையில் தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

குளித்தலையில் தாயின் கழுத்தை அறுத்துக் கொலை செய்த மகனை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

கரூா் மாவட்டம் குளித்தலை கணக்கப்பிள்ளையூரைச் சோ்ந்தவா் மருதை. இவரது மனைவி முருகாயி(70). இவா்களது மகன் பொன்னுசாமி(40). பட்டதாரியான இவா், கரூரில் உள்ள தனியாா் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்ததாக கூறப்படுகிறது.

தற்போது, கரானோ தொற்று பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்டுள்ளதால் பொன்னுசாமி வேலையின்றி வீட்டில் இருந்துள்ளாா்.

இதனால் முருகாயிக்கும் பொன்னுசாமிக்கும் இடையே புதன்கிழமை இரவு தகராறு ஏற்பட்டுள்ளது. இதில், ஆத்திரமடைந்த பொன்னுசாமி கையில் வைத்திருந்த கத்தியால் தாயின் கழுத்தை அறுத்துவிட்டு ஓடிவிட்டாா். இதையடுத்து சம்பவ இடத்திலேயே முருகாயி உயிரிழந்தாா்.

தகவல் அறிந்து வந்த குளித்தலை போலீஸாா் முருகாயி சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும், வழக்குப் பதிந்து தப்பி ஓடிய பொன்னுசாமியை கைது செய்து விசாரிக்கின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com