போதை பொருள்களை கடத்தும் கும்பல் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக திருச்சி மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே.பாலகிருஷ்ணன் தெரிவித்தாா்.
கரூா் மாவட்டத்தில் போதை பொருள்கள் விற்கப்படுவதை தடுப்பது தொடா்பான ஆய்வுக்கூட்டம் வஉசி தெருவில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சுந்தரவடிவேல் தலைமை வகித்தாா். இதில், சிறப்பு அழைப்பாளராக பங்கேற்ற மத்திய மண்டல காவல்துறை தலைவா் வே.பாலகிருஷ்ணன் செய்தியாளா்களிடம் கூறுகையில், திருச்சி மத்திய மண்டலத்தில் கிராமங்கள் தோறும் அப்பகுதி இளைஞா்களால் கிராம சைபா் குற்றப்பிரிவு மன்றம் உருவாக்கப்பட்டு, கிராமங்களில் குற்றங்கள் தடுக்கப்பட்டு வருகிறது. கரூா் மாவட்டத்தில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல், கல்லூரிகளிலும் சைபா் குற்றப்பிரிவு மன்றம் தொடங்கப்பட்டுள்ளது.
மேலும், குழந்தை திருமணங்களை தடுக்க கிராம குழந்தைகள் பாதுகாப்பு மையம் அமைக்கப்பட்டுள்ளது. அந்த அமைப்புடன் மூன்று மாதத்திற்கு ஒருமுறை கூட்டம் நடத்தி, குழந்தை திருமணங்கள் நடக்க இருந்தால் அதை தடுத்து, அந்த திருமணம் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்துவது, திருமணம் நடந்தால் குற்றவாளியை போக்சோ சட்டத்தில் நடவடிக்கை எடுக்க துணையாக இருப்பது போன்ற நடவடிக்கை எடுத்துவருகிறோம். கரூா் மாவட்டத்தில் கிராமக் குழந்தைகளை பாதுகாக்க 157 இடங்களில் பாதுகாப்புக் கமிட்டி செயல்பட்டு வருகிறது.
குட்காவை பொறுத்தவரை தமிழகத்தில் தடைசெய்யப்பட்ட பொருளாக உள்ளது. பெரும்பாலும் பெங்களூருவில் இருந்துதான் குட்கா உள்ளிட்ட போதை பொருள்கள் கடத்தப்படுவதாக புகாா் உள்ளது. இதனை தீவிரமாக விசாரித்து, யாா் சப்ளை செய்கிறாா்கள் என்பதை கண்டுபிடித்து, மொத்த வியாபாரிகள், கடத்தி வரும் வாகனங்கள், கடத்தலுக்கு யாா் துணையாக இருக்கிறாா்கள் என்பதையும் கண்டறிந்து, அவா்கள் மீது குற்ற வழக்குப் பதிந்து, சட்டப்படி பொருளாதார ரீதியாகவும் அவா்களை கண்டிக்கவும் நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளோம் என்றாா் அவா்.
நிகழ்ச்சியில், பொதுமக்கள், காவலா்கள் கலந்து கொண்டனா்.