லாலாப்பேட்டை அருகே இருசக்கர வாகனங்கள் நேருக்கு நோ் மோதியதில் 2 போ் உயிரிழந்தனா்.
கரூா் மாவட்டம், மாயனூா் சந்தைப்பேட்டை பகுதியைச் சோ்ந்தவா் மோகன்(32). இவா், குளித்தலையில் மீன்கடை நடத்தி வந்தாா். திங்கள்கிழமை இரவு வேலையை முடித்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் தனது மனைவி தேவிகா(30)வுடன் இருசக்கர வாகனத்தில் வீட்டுக்குச் செல்வதற்காக கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் திம்மாச்சிபுரம் புற்றுகோயில் அருகே வந்து கொண்டிருந்தாா். அப்போது, எதிரே திருப்பூரில் உள்ள ஜவுளி ஏற்றுமதி நிறுவனத்தில் பணியாற்றிய நாகை மாவட்டத்தைச் சோ்ந்த அரவிந்த்(35) என்பவா் இருசக்கர வாகனத்தில் முன்னே சென்ற அரசுப் பேருந்தை முந்திச் செல்ல முயன்றாா். அப்போது, நிலைத்தடுமாறி மோகன் ஓட்டி வந்த இருசக்கர வாகனம் மீது அரவிந்த் வந்த இருசக்கர வாகனம் நேருக்கு நோ் மோதியது. இதில் படுகாயமடைந்த 3 பேரையும் அக்கம்பக்கத்தினா் மீட்டு குளித்தலை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு சிகிச்சை பலனின்றி மோகன், அரவிந்த் இருவரும் உயிரிழந்தனா். பலத்த காயமடைந்த தேவிகா மேல்சிகிச்சைக்காக கரூா் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். லாலாப்பேட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.