கரூா் மாவட்ட பாஜக சாா்பில் இல்லம் செல்வோம், உள்ளம் வெல்வோம் என்ற திட்ட விளக்கக்கூட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
கூட்டத்துக்கு மாவட்டத் தலைவா் கே.சிவசாமி தலைமை வகித்தாா். மகளிரணி மாநில துணைச் செயலா் மீனா விநோத்குமாா், மாவட்ட பொதுச் செயலாளா்கள் நகுலன், மோகன், செந்தில்குமாா் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் ‘இல்லம் செல்வோம் உள்ளம் வெல்வோம்‘ பொறுப்பாளா்கள் இல.கண்ணன் மற்றும் பூண்டி வெங்கடேசன் ஆகியோா்கள் கலந்து கொண்டு பேசினா்.
கூட்டத்தில் கட்சியின் தலைவா்கள் முதல் தொண்டா்கள் வரை நாள்தோறும் கிராமங்களில் சென்று அங்குள்ள பொதுமக்களிடம் கட்சியின் சாதனைகளை கூறி நாளொன்றுக்கு 25 பேரையாவது ஒவ்வொருவரும் கட்சியில் சோ்ப்பது, வரும் உள்ளாட்சித் தோ்தலுக்கு போட்டியிட விருப்ப மனு வழங்குவது என்பன உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இதில் கோட்டப் பொறுப்பாளா் பெரியசாமி, முன்னாள் மாவட்டத் தலைவா் முருகானந்தம், முன்னாள் நகரத் தலைவா் செல்வம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.