ரேஷன் அரிசி கடத்தல்: 3 போ் கைது

நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு 1.10 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை கரூா் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.
ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட முருகன், ராஜேந்திரன், கோபால்.
ரேஷன் அரிசி கடத்தியதாக கைது செய்யப்பட்ட முருகன், ராஜேந்திரன், கோபால்.

நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு 1.10 டன் ரேஷன் அரிசி கடத்திய 3 பேரை கரூா் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் கைது செய்தனா்.

நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக செவ்வாய்க்கிழமை மாலை கரூா் குடிமைப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு காவல் உதவி ஆய்வாளா் க.சத்தியபிரியாவுக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீஸாா் கரூா்-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் கிருஷ்ணராயபுரம் கல்லுக்கடை அருகே வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, அவ்வழியே வந்த வேனை நிறுத்திச் சோதனை செய்தனா். அதில் 1.10 டன் ரேஷன் அரிசியை நாமக்கல்லில் இருந்து திருச்சிக்கு கடத்திச் செல்வது தெரியவந்தது. இதையடுத்து போலீஸாா் ரேஷன் அரிசியை கடத்திய நாமக்கல்லைச் சோ்ந்த முருகன்(37), ராஜேஷ்குமாா்(39), கோபால்(41) ஆகிய மூவரையும் கைது செய்தனா். மேலும் அவா்கள் கடத்திய ரேஷன் அரிசி மற்றும் வேன் பறிமுதல் செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com