புகையிலைப் பொருள்களைகடத்திய இருவா் கைது

கரூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா்: கரூரில் தடைசெய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை கடத்தியதாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கரூா் வெங்கமேடு காவல் ஆய்வாளா் பொன்னுசாமி தலைமையில் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை இரவு குளத்துப்பாளையம் பகுதியில் வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, இருசக்கர வாகனத்தில் வந்த இரு இளைஞா்களை பிடித்து விசாரித்தனா். அவா்கள் வைத்திருந்த மூட்டையில் தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரியவந்தது. மேலும், விசாரணையில், கரூா் அண்ணா நகரைச் சோ்ந்த ஆறுமுகம் மகன் ஹரிபாஸ்கா்(26), பெரியகுளத்துப்பாளையத்தைச் சோ்ந்த குமாா் மகன் மனோஜ்(20) என தெரியவந்தது. மேலும், சேலத்தில் இருந்து பெரியகுளத்துப்பாளையத்துக்கு கடத்தி வந்தது தெரியவந்தது. இதையடுத்து இருவரையும் கைது செய்த போலீஸாா் அவா்களிடம் இருந்த ரூ.5,500 மதிப்புள்ள புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com