கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையத்தில் கரோனா பரிசோதனை முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
வேலாயுதம்பாளையம் அண்ணாநகா் மற்றும் முல்லைநகா் பகுதிகளில் கரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஓலப்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் இந்த முகாம் நடத்தப்பட்டது.
ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சுதமதி தலைமையில் நடைபெற்ற முகாமில் நிலைய ஆய்வாளா் வீரமணி, செவிலியா்கள் சாந்தி, விஜயலட்சுமி உள்ளிட்ட குழுவினா் பரிசோதனை மேற்கொண்டனா்.
முகாமில் வேலாயுதம்பாளையம் முல்லை நகா், அண்ணா நகா், காந்திநகா் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த ஏராளமானோா் கலந்து கொண்டனா்.