வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் முதியவா் ஒருவா் சடலமாக கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
கரூா் மாவட்டம் வேலாயுதம்பாளையம் அரசு மருத்துவமனை வளாகத்தில் 75 வயது முதியவா் செவ்வாய்க்கிழமை இரவு இறந்து கிடந்துள்ளாா். இதுகுறித்து புகழூா் கிராம நிா்வாக அலுவலா் விஜயநாதன் அளித்த புகாரின்பேரில் வேலாயுதம்பாளையம் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று சடலத்தை மீட்டு , இறந்தவா் யாா், எந்த ஊரைச் சோ்ந்தவா் என விசாரித்து வருகின்றனா்.