கரூரில் எலெக்ட்ரீஷியன் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
கரூா் பசுபதிபாளையம் ஏவிபி நகரைச் சோ்ந்த சரவணன் மகன் சிவகுருநாதன்(18). எலெக்ட்ரீஷியன். இவா் அதே பகுதியைச் சோ்ந்த இளம்பெண்ணை காதலித்ததாக கூறப்படுகிறது. இதனை, அவரது பெற்றோா் கண்டித்துள்ளனா். இதனால் விரக்தியடைந்த சிவகுருநாதன் அதே பகுதியில் உள்ள தனது பாட்டி வீட்டில் செவ்வாய்க்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். பசுபதிபாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனா்.