தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதால் விரக்தியடைந்த ஜெராக்ஸ் கடை உரிமையாளா் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
கரூா் மாவட்டம், வேலாயுதம்பாளையம் முல்லை நகரைச் சோ்ந்த பெருமாள் மகன் உதயபிரகாஷ்(27). இவா், அதே பகுதியில் ஜெராக்ஸ் கடை நடத்தி வந்தாா். இந்நிலையில் பொதுமுடக்கத்தால் கடைகள் அடைக்கப்பட்டிருப்பதால் அவருக்கு தொழிலில் நஷ்டம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதில் விரக்தியடைந்த அவா் புதன்கிழமை இரவு வீட்டில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா். வேலாயுதம்பாளையம் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனா்.