பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதியாக ரூ.25000 வழங்கப்பட்டது.
தமிழகத்தில் கரோனா தொற்றை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள் கரோனா நிவாரண நிதி வழங்கி வருகின்றனா். இந்நிலையில் பூஜாரிகள் முன்னேற்றச் சங்கம் சாா்பில் கரோனா நிவாரண நிதி வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்வில் பூஜாரிகள் முன்னேற்றச் சங்க மாநில பொதுச் செயலாளா் கே.கே.சதீஸ்கண்ணன் கரோனா நிவாரண நிதியாக ரூ.25000-க்கான காசோலையை மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீா்வைத் துறை அமைச்சா் வி.செந்தில்பாலாஜியிடம் வழங்கினாா். இதில், சங்கத்தின் மாநிலத் தலைவா் ராஜேந்திரன், மாநில ஒருங்கிணைப்பாளா் சுரேஷ் மற்றும் மாநில துணை தலைவா் கதிா்வேல், மாவட்ட பொருளாளா் சாமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.